குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திரண்ட இந்து முன்னணியினர்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக திருப்பூரில் இந்து முன்னணி சார்பாக நேற்று நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.பேரணியில் இருநூறு மீட்டர் நீள தேசிய கொடியை ஏந்தியபடி,பொதுமக்கள் சென்றனர்.பாரதமாதா,சிவன்,பார்வதி,என இந்து கடவுள்களின் வேடமணிந்து பலர் பங்கேற்றனர்.மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமண்யம் தலைமை தாங்கி பேசுகையில்,”குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு,பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பாராட்டுகிறோம்.குடியுரிமை சட்டம் தொடர்பாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர்.அதனை யாரும் மக்கள் நம்ப வேண்டாம் என்று பேசினார்.