கிருஸ்துவ ஜாதிகள்

ஜாதி பேதமில்லை என கூறிக்கொள்ளும் கிறிஸ்தவத்தில் உலகம் முழுவதும் சுமார் 33,830 ஜாதிகள் உள்ளன. தமிழகத்தில் பட்டியல் இன மக்கள் பெரும்பான்மையாக இருந்தும் அவர்களுக்கு தேவாலயங்களில் உரிய இடமோ அங்கீகாரமோ வழங்கப்படுவதில்லை. வேளாங்கண்ணி திருவிழாவில் கூட ஒரு ஜாதிக்கு ஒரு நாள் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், புதுவை- — கடலூர் மறைமாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்களில் பட்டியல் இனத்தவர் 75 சதவீதம் உள்ளனர். எனவே, அங்குள்ள கிறிஸ்தவ பள்ளி ஆசிரியர், அலுவலர் பணியிடங்கள், குருமடங்கள், பேராயர் பணியிடம் உள்ளிட்டவற்றில் 3:1 என்கிற விகிதாச்சாரம், சுழற்சி முறை அடிப்படையில் பணி வழங்க வேண்டும், கண்டிப்பாக பட்டியலின பேராயரை மட்டுமே நியமிக்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை ‘தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தினர்’  வலியுறுத்தி  போராடி  வருகின்றனர்.