பொங்கல் பரிசில் மாற்றம் வருமா?

பொங்கல் பண்டிகையை ஒட்டி பொங்கல் பரிசு தரும் நடைமுறை பல ஆண்டுகளாக தமிழகத்தில் தொடர்கிறது. இதில் வழக்கமாக சர்க்கரை தரப்படுகிறது. ஆனால் யாரும் சர்க்கரையை வைத்து பொங்கல் செய்வதில்லை. வெல்லமே இதற்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே, தமிழக அரசு வரும் காலங்களில் பொங்கல் தொகுப்பில் அரிசியுடன் வெல்லம், பயத்தம் பருப்பு, கரும்பு, பனங்கிழங்கு ஆகியவற்றை வழங்குவதை குறித்து சிந்திக்கலாம். வெல்லம் அல்லது பனை வெல்லம் வழங்கப்படுவதால் அவற்றை  தயாரிக்கும் கிராம மக்களின் பொருளாதாரமும் மேம்படும். கரும்பு, பனையின் பயன்பாடும் அதிகரிக்கும்.