அப்பட்டமான அத்துமீறல்கள்

செங்கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளர் ஜெபக்கூட்டம் நடத்தியுள்ளார். அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்தி சட்டம் ஒழுங்கு, சமூக ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டிய காவல் நிலையத்தில் இப்படி மதசார்பு நிகழ்ச்சியை நடத்தியது கண்டிக்கத்தக்கது. அதேபோல, காஞ்சி கோயிலில் அலுவலக வேலைக்காக மட்டுமே நியமிக்கப்பட்ட அதன் அறநிலையத்துறை அலுவலர், அங்கு பாசுரம் பாடிய பக்தர்களையும் பட்டாச்சாரியார்களையும்  இங்கே நிற்கக்கூடாது, இப்படி பாடக்கூடாது என மிரட்டுகிறார். இதுபோல ஆங்காங்கு நடத்தப்படும் அத்துமீறல்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.