காஷ்மீரில் துப்பாக்கி சத்தமே இல்லை – அமித்ஷா

காஷ்மீர் விவகாரம் தொடர்பான விவாதம் இன்று லோக்சபாவில் நடந்தது. அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்து பேசுகையில்; காஷ்மீரில் இன்று வரை முழு அமைதி நிலவுகிறது. இங்கு சட்ட மாற்றம் அறிவிக்கப்பட்ட பின்னர் காங்கிரசாருக்கு ரத்த கொதிப்பு வந்துள்ளது. இதனை நான் சரி செய்ய முடியாது. காஷ்மீரில் சாதாரண சூழல் தான் நிலவுகிறது. குறிப்பிட்டு சொல்லும்படியான வன்முறை ஏதும் இல்லை. இது வரை ஒரு துப்பாக்கிச்சூடு கூட நடத்தப்படவில்லை. முழு அமைதி நிலவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.