காங்கிரஸ்க்கு வந்த சோதனை

பாஜகவுக்கு பதிலடி தர, நல்ல தலைமை செய்தி தொடர்பாளரை தேடி வருகிறது காங்கிரஸ் கட்சி.

பெயருக்கு அந்த பொறுப்பில் இருந்த ரந்தீப் சுர்ஜேவாலாவும் கர்நாடக பொறுப்பாளராகி விட்டார். ராகுலின் விமர்சனங்களும், புள்ளி விவரங்களுடன் கூடிய பாஜகவின் பதிலடிகளால் தவிடுபொடியாகி வருகிறது.

ஊழல் இல்லாத, தேச விஸ்வாசமுள்ள, நேர்மையான அரசை குறைகூற வேறு வழிகள் இல்லாததால் பொய் சொல்வது, செய்திகளை திரித்து கூறுவது என அரசியல் செய்து கட்சியை நடத்த வேண்டிய சூழலில் பரிதாபமாகிவிட்டது காங்கிரஸின் நிலைமை.

பாஜகவை குறை கூற, ஆட்சி அமைக்க காங்கிரஸுக்கு ஒரு சிறிய யோசனை. அவர்களைவிட அதிகமாக தேசபக்தியை வளர்த்துக்கொண்டு, மக்களுக்கு உண்மையாக உழைப்பது தான் இதற்கு ஒரேவழி. ஆனால் இது அவர்களுக்கு புரியுமா?