மிகைபடுத்தப்பட்ட செய்தி

பாரத ராணுவத்துக்கு தவறான வெடிமருந்துகள் வழங்கியதால் சில ராணுவ வீரர்களின் உயிரும், 960 கோடி பணமும் வீணாகியதாக சில பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இவை சரிபார்க்கப்படாத அறைகுறை அறிக்கைகள்.

இந்த விபத்துகளுக்கு பராமரிப்பின்மை, தவறான பயிற்சி, சில வடிவமைப்பு மாற்றங்கள், பழைய வெடிபொருள் பயன்பாடு என பல காரணங்கள் இருக்கலாம். அது குறித்த விசாரணை நடைபெறுகிறது.

முன்பைவிட தற்போது விபத்துகள் பெருமளவு குறைந்துள்ளன. இவை மிகைப்படுத்தப் பட்ட செய்திகள் என ராணுவ ஆர்டனன்ஸ் தொழிற்சாலை வாரியம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அரைகுறை தகவலை வைத்து ராணுவத்தை குறைகூறுவது நம் ராணுவத்துக்கும், தேசத்துக்கும் நாம் செய்யும் துரோகம்.