கங்கையை பல ஆண்டுகளாக நாம் பாதுகாக்க தவறிவிட்டோம் – அமித்ஷா

நாட்டின் முக்கிய நதிகளில் ஒன்றான கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம் வெற்றி அடைந்துள்ளது. அந்த நதியின் தண்ணீர் தரம் உயர்ந்துள்ளது. கங்கையை போல நாட்டின் பிற நதிகளையும் தூய்மைப்படுத்தும் திட்டம், மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும்.

நமது தாயை போன்ற கங்கையை பல ஆண்டுகளாக நாம் பாதுகாக்கத் தவறிவிட்டோம். ஆனால் கடந்த 2014-ல் பிரதமர் நரேந்திர மோடி தொங்கி வைத்த தூய்மை கங்கை திட்டம், அந்த நதியின் தண்ணீரின் தரத்தில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கங்கை நதி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து 15 வயதுக்குட்பட்ட நமது குழந்தைகளுக்கு நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்தக் குழந்தைகள் அடுத்த 60-70 ஆண்டுகளில் கங்கையை பாதுகாப்பதில் வல்லவர்களாக இருப்பதை நாம் காணமுடியும்.

இவ்வாறு அமைச்சர் அமித்ஷா பேசினார்.