உலக யோகா தினத்தில் உரை பணியில் யோகா செய்யும் ராணுவ வீரர்கள்

சர்வதேச யோகா தினத்தை, நம் ராணுவ வீரர்களும், பாதுகாப்பு படையினரும் உற்சாகமாக கடைப்பிடித்தனர். சிக்கிம் மற்றும் லடாக் உள்ளிட்ட இடங்களில், நம் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர், யோகா பயிற்சியில் பங்கேற்றனர்.

ஜீரோ டிகிரி செல்ஷியசுக்கும் குறைவான உறைபனி வெப்பநிலையில் சிக்கிமில் 18 ஆயிரத்து, 800 அடி உயரத்தில், , ஐ.டி.பி.பி., என்படும் இந்தோ — -திபெத் எல்லை பாதுகாப்பு படையினர், யோகாவில் ஈடுபட்டனர்.இவர்களில் மற்றொரு பிரிவினர், உத்தரகண்ட் மாநிலத்தில், 10 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள ஆலி நகரில், யோகா மேற்கொண்டனர். இந்திய ராணுவத்தினர், ஜம்மு – காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரின், ரங்கிரெத்தில் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.