உலக சாம்பியன் பட்டம் மாணவிக்கு பாராட்டு

காது கேளாதோருக்கான, சர்வதேச யூத் இறகுப்பந்து போட்டி, தைவானில் சமீபத்தில் நடந்தது. இப்போட்டியில், 27 நாடுகள் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தின. இதில், இந்தியா சார்பில், தமிழகத்தைச் சேர்ந்த, ஜெர்லின் அனிகா பங்கேற்று, உலக சாம்பியன் பட்டம் வென்றார். இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகளில் பங்கேற்று, இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இவர், மதுரை, அவ்வை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார். சென்னையில் நேற்று முன்தினம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர், சந்திரசேகர் சாகமூரியை சந்தித்து, வாழ்த்து பெற்றார்.