உலக அளவில் இந்தியாவின் முதலாவது பதக்கம் – சைக்கிள் போட்டி

உலக ஜூனியர் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. ஜெர்மனியில் உலக ஜூனியர் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதன் அணிகளுக்கான போட்டியில் இந்தியாவின் எசோவ் ஆல்பேன்,ரோஜித் சிங், ரொனால்டோ சிங் அடங்கிய அணி களமிறங்கியது.

இதில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி முதலிடம் பிடித்து தங்கம் கைப்பற்றி, புதிய வரலாறு படைத்தது. ஆண்கள் தனிநபர் ‘ஸ்பிரிண்ட்’ பிரிவில் இந்தியாவின் எசோவ் ஆல்பேன் இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளி கைபற்றினார்.

‘கெய்ரின்’ தனிநபர் பிரிவிலும் அசத்திய எசோவ் ஆல்பேன், மூன்றாவது இடம் வென்று வெண்கலம் வசபடுத்தினார்.

உலக ஜூனியர் சைக்கிளிங் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணியின் சிறந்த செய்யல்படாக இது அமைந்தது.