இப்படியும் ஒரு மதவெறியா?

உத்தரபிரதேசம் ரேபரேலியில் வசிக்கும் முகமது அன்வர் என்பவர் கடந்த செப்டம்பர் 2020ல், முறையாக மந்திரங்கள் ஓத, வேள்வி செய்து, ஹிந்துவாக மதம் மாறினார். தனக்கும் குழந்தைகளுக்கும் ஹிந்து பெயர்களை சூட்டிகொண்டார். இவரை அது முதல் அவர்மீது காழ்ப்புணர்ச்சியுடன் இருந்த அந்த ஊர் முஸ்லிம்களும் ஊர் தலைவரும் கடந்த சனிக்கிழமை அன்று இரவு, அவர் குடும்பத்துடன் தூங்கும்போது, வீட்டை வெளிப்பக்கமாக பூட்டி தீ வைத்து எரித்துள்ளனர். ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக தன் குடும்பத்துடன் பின்பக்க வாசல்வழியாக தப்பிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறை, ஊர் தலைவர் தாஹிர் உட்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.