இந்து முன்னணி அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

காட்டூர் ரங்கே கோணார் வீதியில் இந்து முன்னணி கோவை மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இன்று காலை பத்து மணிக்கு அலுவலக ஊழியர் திறக்க வந்தபோது உடைந்த பாட்டில் கிடப்பதைக் கண்டு இந்து முன்னணி அமைப்பினருக்குத் தகவல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தகவல் கிடைக்கப் பெற்று சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணம் காவல்துறையினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் அருகில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். மேலும் அங்கு அருகில் சிசிடிவி கேமராவில் சம்பவம் தொடர்பாகப் பதிவாகி உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர். இதன் காரணமாக போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.