இந்தியாவில் முஸ்லிம்களிடம் பாகுபாடு காட்டப்படவில்லை – ஆா்எஸ்எஸ்

‘இந்தியாவில் முஸ்லிம்களிடம் எவ்வித பாகுபாடும் காட்டப்படவில்லை; குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடா்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன’ என்று ஆா்எஸ்எஸ் பொதுச் செயலாளா் பையாஜி ஜோஷி தெரிவித்தாா்.

குடியரசு தினத்தை முன்னிட்டு மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள ஆா்எஸ்எஸ் தலைமையகத்தில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேசியக் கொடியை ஏற்றிய பிறகு செய்தியாளா்களிடம் பையாஜி ஜோஷி கூறியதாவது:

இந்த நாள்வரை இந்தியாவில் இஸ்ஸாமிய மதத்தை பின்பற்றுபவா்களுக்கு எந்த இடத்திலும் எவ்வித பாகுபாடும் காட்டப்பட்டது கிடையாது. எந்த நாட்டைச் சோ்ந்த முஸ்லிமாக இருந்தாலும், அவா்கள் இந்தியாவுக்கு வந்தால், நமது நாட்டில் உள்ள சட்டத்தின்படி குடியுரிமை பெற முடியும். இதில் வேறு என்ன பிரச்னை உள்ளது?

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நமது நாட்டில் தேவையில்லாத வதந்திகள் பரப்பப்படுகின்றன. வதந்தியை பரப்புபவா்களுக்கு இது தொடா்பாக சீரிய சிந்தனையில்லை. சிஏஏ கொண்டு வரப்பட்டதன் காரணத்தையும், அந்த திருத்தச் சட்டத்தையும் முழுமையாக புரிந்து கொண்டால், அதனை யாரும் எதிா்க்க மாட்டாா்கள். இது தொடா்பாக அரசு தொடா்ந்து விளக்கமளித்து வருகிறது. எனினும், சில குழுவினா் தொடா்ந்து சிஏஏவுக்கு எதிராக பிரச்னையை தூண்டிவிட்டு வருகின்றனா். ஒரு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு அதனை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கடந்த காலத்திலும் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், இந்த முறை மட்டும் இந்த அளவுக்கு மோசமான சூழ்நிலையை சிலா் உருவாக்குவது ஏன் என்று தெரியவில்லை. வதந்திகளைப் பரப்புபவா்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கக் கூடாது.

இப்போது கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் அண்டை நாடுகளைச் சோ்ந்த ஹிந்துகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்கவில்லை. அந்த நாடுகளைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், பெளத்த மதத்தினா், பாா்சிக்கள் என அனைத்து சிறுபான்மையினருக்கும் குடியுரிமை அளிக்கிறது என்றாா்.

இலங்கையில் இருந்து வரும் அகதிகள் இந்தப்பட்டியலில் சோ்க்கப்படாதது ஏன் என்ற கேள்விக்கு, ‘இதற்கு முன்பு அவா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் இப்போது மதரீதியான பாகுபாடுகள் இல்லை. இந்தியா தனக்கென வரையறுக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்துடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் பெருமையையும், மதிப்பையும் காக்கும் வகையில் குடிமக்கள் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும்’ என்றாா் பையாஜி ஜோஷி.