ஆன்மீக கண்காட்சியை முன்னிட்டு 2,000 மாணவிகள் ஒன்று கூடி பரதம் ஆடி அசத்தல்

இந்து ஆன்மீக கண்காட்சியின் முன்னோட்டமாக நடைபெற்ற பிரமாண்ட பரதநாட்டிய நிகழ்ச்சியில், 2 ஆயிரம் பெண்கள் ஒன்றுக் கூடி பரதநாட்டியம் ஆடியது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.

11-வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் வருகிற 28-ஆம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் முன்னோட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், பரதமுனி சமஸ்கார நடனம் என்ற தலைப்பில், மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பரத முனிவரை போற்றும் வகையில், 6 பண்புகளை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற இந்த பரதநாட்டிய நிகழ்ச்சியில், பல்வேறு மொழி பாடல்களுக்கு 2 ஆயிரம் மாணவிகள் ஒரே நேரத்தில் நாடனமாடியது காண்போரை பரவசப்படுத்தியது.