ஆர்.எஸ்.எஸ் வடதமிழக தலைவர்

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) வடதமிழகத்தின் தலைவராக (பிராந்த சங்கசாலக்) முனைவர் குமாரஸ்வாமி ஜீ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஆர்.எஸ்.எஸ் வடதமிழகத்தின் சங்கசாலக் (தலைவர்) தேர்தல் இன்று சென்னையில் நடைப்பெற்றது. குமாரஸ்வாமி ஜீ அவர்கள் வடதமிழகத்தின் ஆர்.எஸ்.எஸ் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முனைவர் கே குமாரஸ்வாமி (எ) கே கே சாமி ஜீ சேலம் அரசு கல்லூரியில் ஆங்கிலத்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பெரியார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும், ராசிபுரம் ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.