ஆதரவு பெருகுது அர்னாப்கோஸ்வாமிக்கு

காங்கிரஸ் துணையுடன் மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா அரசு, பழிவாங்கும் நடவடிக்கையாக ரிபப்ளிக் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ததை கண்டித்தும் அர்னாப்பை உடனடியாக விடுவிக்க வேண்டியும், பல்வேறு தரப்பினரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் அரசியல் தலைவர்கள், அகில இந்திய பார் கவுன்ஸில் அமைப்பு, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள், இந்திய டிஜிட்டல் மீடியா அசோசியேஷன் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொது மக்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். முன்னாள் ராணுவ ஜெனரல் பக்ஷியும் தன் கண்டனத்தை பதிவு செய்ததுடன் ‘ராணுவ வீரர்கள் உங்களுக்கு பக்க துணையாக இருப்பார்கள்’ என அர்னாப்புக்கு தெரிவித்துள்ளார்.