அரசுக்கு உயர்நீதிமன்றம் குட்டு

அரசின் கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் கோயில் நிலம் கோயிலுக்கு என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

அரசு நிலத்தை ஆக்கிரமித்தது தவறு, அதை குத்தகை ஒப்பந்தத்திற்கு மாற்ற வேண்டும். ஆக்கிரமிப்பு நடக்காமல் அரசும், மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கோயில் சொத்துகளை மீட்டு முறையாக பராமரிக்க வேண்டும். அதன் வருவாயை கோயில் மேம்பாட்டிற்கே செலவிட வேண்டும்.

கோயில் தொடர்பான ஆவணங்கள், கோப்புகள் காணாமல் போன விஷயத்தில் விசாரணை செய்து, தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மோசமான நிலையில் உள்ள கோயில்களின் விவரங்கள், புகைப்படங்களை என்ற savetemples@ourtemplesourprideourright.in  இ-மெயில் முகவரிக்கு அனுப்ப திருச்சி ‘ரங்கராஜன் நரசிம்மன்’ கோரிக்கை விடுத்துள்ளார்.