ஆசிரியரான மாணவி

கேரளா, பாலக்காடு, சோலையூர் கிராமத்தில் உள்ள 8வது படிக்கும் மாணவி அனாமிகா அங்குள்ள பழங்குடியினர்களுக்கு இலவசமாக தினமும் எழுத படிக்க சொல்லிகொடுக்கிறார். இதில் தற்போது 14 பேர் படிக்கின்றனர்.

கொரோனா பொதுமுடக்கத்தால் பள்ளிகள் இயங்கவில்லை. இவரது வீட்டில் மின்சாரம், ஸ்மார்ட் போன் வசதிகள் கிடையாது. எனவே இவரால் ஆன்லைன் வகுப்பில் படிக்க முடியவில்லை.

எனினும் தன் நேரத்தை பயனுள்ளதாக மாற்றிய சிறுமி பாடம் எடுத்து வழிகாட்டுகிறார்.

சில தன்னார்வலர்கள் இணைந்து அனாமிகாவின் வீட்டிற்கு தற்போது மின்சார வசதியுடன், டிஷ் டிவி, ஸ்மார்ட் போனும் வாங்கிக்கொடுத்து ஊக்கப்படுத்தியுள்ளனர்.