அத்திவரதர் விழாவில் சயன கோலம் நிறைவு – இன்றுமுதல் நின்றகோல தரிசனம்

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற்று வருகிறது. வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்தி வரதர் அனந்தசரஸ் திருக்குளத்தில் இருந்து எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலித்து வருகிறார். மொத்தம் 48 நாட்கள் இந்த மண்டபத்தில் இருந்து பக்தர் களுக்கு தரிசனம் அளிக்கிறார்.

விழா தொடங்கும்போது முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சி அளிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த 31 நாட்களாக அத்திவரதர் சயன கோலத்திலேயே வைக்கப் பட்டார். சயன கோல தரிசனம் நேற்றுடன் நிறைவு பெற்றது. அத்திவரதர் நேற்று மஞ்சள் நிறப் பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

கிழக்கு கோபுர வாசல் வழி யாக நண்பகல் 12 மணிவரை பொது தரிசனத்துக்கு கோயிலுக் குள் பொதுமக்கள் அனுமதிக்கப் பட்டனர். முக்கியப் பிரமுகர்கள், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் ஆகியோர் அத்தி வரதரை மாலை 5 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டனர்.

அத்திவரதர் தரிசனம் நேற்று மாலை 5 மணியுடன் நிறுத்தப்பட்டு அதன் பின்னர் நின்ற கோலத்தில் வைக்கும் பணிகள் தொடங்கின. கடந்த 1979-ம் ஆண்டு எந்த பீடத்தின் மீது அத்திவரதர் நிறுத்தப்பட்டாரோ அதே பீடத்தின் மீது இப்போதும் நிறுத்தும் பணிகள் நடைபெற்றன. இன்று காலை (ஆகஸ்ட் 1) முதல் அத்திவரதரை பக்தர்கள் நின்ற கோலத்தில் தரிசிக்கலாம்.

இன்றுமுதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.