சௌதி கொண்டாடும் யோகா

சௌதி அரேபியாவில் யோகாவை ஊக்குவிப்பதற்கான பல்வேறு வழிகளைப் பற்றி விவாதிக்க கடந்த ஆகஸ்ட் 1ல் பாரதத்தை சேர்ந்த இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், யோகாசன விளையாட்டு கூட்டமைப்பு அதிகாரிகளுடன் சௌதி யோகா குழு ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. இதற்காக சௌதி அரேபியாவில் யோகாவை பிரபலப்படுத்த பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் நூஃப் மர்வாய் தலைமையில் யோகா குழு ஒன்று அமைக்கப்பட்டது. கடந்த 2018ல் பாரத அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தது நினைவு கூரத்தக்கது. இது குறித்து கருத்து தெரிவித்த சௌதி விளையாட்டு அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் அப்துல்லா பைசல், ‘சௌதி அரேபியாவில் உள்ள உள்ளூர் சட்டங்களுக்கு ஏற்ப ஒரு யோகா நெறிமுறைகள் இறுதி செய்யப்பட்டது. அவை விரைவில் செயல்படுத்தப்படும்’ என தெரிவித்தார்.