அடுத்த கைது அமைச்சர் பொன்முடி; பா.ஜ., நிர்வாகி தகவல்

கிருஷ்ணகிரியில் ஓசூர் தெற்கு மண்டல பா.ஜ., கட்சி சார்பில் மத்திய அரசின் ஒன்பதாண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் மத்திகிரி பஸ் ஸ்டாண்டில் நேற்று நடந்தது. இதில் பேசிய, பா.ஜ., சிறுபான்மை அணி தேசிய செயலர் இப்ராஹிம் பின் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்,  தி.மு.க., அமைச்சர்கள், கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கின்றனர். எம்.எல்.ஏ., முதல் அமைச்சர்கள் வரை மிகப் பெரிய ஊழல் நடக்கிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி கொள்ளை வழக்கிற்குநீதிமன்றத்தில் தடுப்பாணை கொடுக்கப்படவில்லை.அந்த வழக்கில், பொன்முடி கைதாக வாய்ப்புள்ளது.போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் துறையில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. தமிழக அமைச்சர்களின் கூட்டு சதி, கொள்ளை பற்றி, விரைவில் பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‘தி.மு.க., பைல் – 2’ வெளியிட உள்ளார். விரைவில் பல அமைச்சர்களின் தலை உருள போகிறது.இவ்வாறு அவர் கூறினார்.