கைதிகளுக்கு யோகா பயிற்சி

தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை, வேலூர் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் உள்ள மத்திய சிறைகள் உட்பட 18 சிறைச்சாலைகளில் உள்ள சிறைக் கைதிகளின் உடல் நலத்தை மேம்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் கைதிகளுக்கும், சிறைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கும் ஈஷா யோகா மையத்துடன் இணைந்து சிறைத்துறை நிர்வாகம் யோகா பயிற்சி அளித்து வருகிறது. ‘சிறையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி வரும் சூழலில், கைதிகளின் உடல்நலத்தை மேம்படுத்த யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது’ என கோவை சரக சிறைத் துறை டிஐஜி சண்முகசுந்தரம் கூறினார்.