போதைப்பொருள் பறிமுதல்

கேரளா மாநிலம் கொச்சியில், அரபிக்கடல் பகுதியில், இந்திய கடற்படையினர் ரோந்துப் பணியில் இருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக அந்த வழியாக பாகிஸ்தானில் இருந்து வந்த இலங்கைக்கு சொந்தமான ஒரு மீன்பிடி கப்பலை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 300 கிலோ போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ. 3,000 கோடி ரூபாய். இதனையடுத்து, கப்பலில் இருந்த இலங்கையைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.