ஆயுதங்கள் பறிமுதல்

உத்தரபிரதேசம், மீரட்டில், காவல்துறையும் சிறப்பு அதிரடிப்படையும் (எஸ்.டி.எப்) இணைந்து நடத்திய ஒரு தேடுதல் வேட்டையில், 133 கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட சட்டவிரோத ஆயுதக் குவியல் கைப்பற்றப்பட்டது. இதில், தப்ரேஸ், ஷபிக், இஸ்ரார், பாரூக், அலி ஹசன், அகீல், அனஸ் மற்றும் பவேந்திரா ஆகிய எட்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வரும் ஏப்ரல் 15, 19, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நான்கு கட்டங்களாக நடைபெறவுள்ள உ.பி. உள்ளாட்சித் தேர்தல்களில் மக்களை மிரட்டுதல், கொலை முயற்சிகளுக்காக இந்த ஆயுதங்களை அவர்கள் சேகரித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.