விஜயபாரதம் சந்தா சேகரிப்பு

விழுப்புரம் “மாதவம்” அலுவலகத்தில் கடந்த 9.2.2022 புதன்கிழமை அன்று மாலை விஜயபாரதம் சந்தா சேகரிப்பு குறித்த அமர்வு நடைபெற்றது. இதில், விஜயபாரதம் வார இதழ் ஆசிரியர் வெள்ளைத்துரை, ஆர்.எஸ்.எஸ் வடதமிழக மக்கள் தொடர்பு அதிகாரி இராம இராஜசேகர், மாவட்ட பிரச்சாரப்பிரிவுத் தலைவர் சூரிய நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர். விஜயபாரதம் வார இதழின் வளர்ச்சி, தேசப்பணி, சமுதாயப் பணி, சமூகத்தில் அதன் தாக்கம், ஏற்படுத்திய மாற்றங்கள், சந்தா சேகரிப்பின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த அமர்வில் விவாதிக்கப்பட்டன. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து குறைந்தபட்சம் ஆயிரம் சந்தாக்கள் சேகரிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.