டார்ச் வெளிச்சத்தில் தடுப்பூசி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் 400 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 27 ஆகஸ்ட் மாலை நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு தடுப்பு செலுத்துவதாக கூறிவிட்டு 4 மணிக்குத் தான் தடுப்பூசி மருந்தே கொண்டு வந்தனர். அதனால், மாலை 5 மணிக்கு மேல்தான் இந்த முகாம் தொடங்கியது. இரவு 8 மணிவரை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. ஆனால் அங்கு மின் விளக்கு வசதி இல்லை என்பதால், செவிலியர்கள் செல்போன் டார்ச் லைட் பிடித்தபடியே மக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.