உன் ஆயுதங்களை எதிரிகளின் மீது பிரயோகி

-“அதோ ய திஸ்தவாரே அஸ்மன்னி தேஹி தம்” என்பது யஜுர்வேதம் ருத்ராத்யாயத்தில் உள்ள ஒரு மந்திரம்.
‘‘உன் ஆயுதங்களை எதிரிகளின்மேல் பிரயோகி!” என்பது இந்த மந்திரத்தின் பொருள். பகவானின் ஆயுதங்கள் ரட்சணைக்கும் சிட்சணைக்கும் சின்னங்கள். தர்மத்தைக் காப்பாற்றுவதில் உள்ள காருண்யமே அதர் மத்தைத் தண்டிப்பதிலும் தென்படுகிறது.

கடவுளின் கருணை, வாத்சல்யம், மன்னிப்பு போன்ற இனிமைமான குணங்களைப் போற்றுகிறோம். அதேபோல், வீரம், பிரதாபம், உக்ரம் போன்ற கடினமான குணங்களையும் துதிக்கிறோம். நம் கடவுளரின் வடிவங்களில் சாந்தமூர்த்திகளும் உள்ளன. உக்ர மூர்த்திகளும் உள்ளன.

சாந்த (யோக) மூர்த்திகள் ஞானத்திற்கும், உக்ர மூர்த்திகள் பாதுகாப்புக்கும் உபாசனைக்கும் உரியவை. நமக்கு ஞானம், பாதுகாப்பு இரண்டுமே தேவை. தர்மத்தைக் காப்பதற்காக நரசிம்மர், காளி, சண்டி போன்ற வடிவங்களிலும், யோக சித்திக்காக தத்தாத்ரேயர், தக்ஷிணாமூர்த்தி, சாரதா போன்ற ரூபங்களிலும் இறைசக்தியைப் பூஜிக்கிறோம். தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் தர்மத்திற்கும்கூட விரோதிகளின் தொந்தரவு இருக்கும். நம்மை வருத்தும் தீய சக்திகளிட மிருந்து நம்மை நாம் காத்துக்கொள்வது அவசியம். அதற்காகத்தான் நாட்டுக்கும் வீட்டுக்கும் பாதுகாப்பு அமைப்பு என்பது அரசாங்கத்தின் முக்கியப் பிரிவாக உள்ளது.

நம் தர்மத்தையும் கலாசாரத்தையும் அழிக்க நினைப்பவர்கள் தோல்வியுற வேண்டும் என நினைப்பது தவறல்ல.

“சர்வபாதா ப்ரசமனம் த்ரைலோக்ய ஸ்யாபிலேஸ்வரி!
ஏவமேவ த்வயாகார்யம் அஸ்மத் வைரி விநாசனம் !!”
என்பது தேவீ மஹாத்மியத்தில் தேவதை களின் பிரார்த்தனை.

“ஓ ஜகதம்பா! மூன்று உலகங்களிலும் கஷ்டங்கள் நீங்க வேண்டும். எங்கள் எதிரிகளை அழிப்பது உன் வேலை!” என்ற இந்தப் பிரார்த்தனை சிறந்த கருத்தோடு கூடியது.
பெருந்துன்பம் தருபவர்களை லோக க்ஷேமத்திற்காக அழிக்கும்படி பிரார்த்திப்பது தர்மம். தர்ம ரட்சணைக்காகப் பிரயோகிக்கும் ஹிம்சை தர்மத்தின் ஒரு பகுதியே. ஆக்கிரமிப்பு, கொள்ளையடிப்பது போன்றவற்றிற்குப் பயன் படும் பலம் அசுர குணம் கொண்டது. தர்மத்தை நிலைநாட்டுவதற்குப் பயன்படுத்தும் பராக்கிரமம் தெய்வீகமானது. சுயநலத்திற்காக அன்றி, உலக நன்மைக்காக பயன்படும் வீரத்தை உற்சாகப்படுத்த வேண்டும். அதனால்தான் நாட்டுப் பாதுகாப்பை கடமையாகக்கொண்ட அர்ஜுனனைப் போருக்குத் தயாராகும்படி ஊக்கப்படுத்தினான் ஸ்ரீ கிருஷ்ணன்.

சகல ஜகத்துக்கும் பாதுகாவலர்களான ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர் போன்ற அவதார மூர்த்திகள் கருணையின் கருவூலம் மட்டுமன்று. வீர, சூர மூர்த்திகளும்கூட. எதற்கும் உபயோகமில்லாத பொறுமை கையாலாகாத்தனமே! நாட்டுக்கும் சமுதா யத்துக்கும் தர்மத்துக்கும் ஆபத்தே! தகுந்த நேரத்தில் தகுந்த பலத்தை வெளிப்படுத்துவது முக்கியமான கடமை. அதனால்தான் வேத விஞ்ஞானம் உலக நலனுக்காக ‘சத்ரு நாசனத்தை’கூட தெய்வப் பிரார்த்தனையில் சேர்த்துள்ளது.

தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்
நன்றி: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா, ருஷிபீடம்