நகர்ப்புற வீட்டு வசதி திட்டம்

பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் கடந்த 2015 – 2016ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது. அப்போது முதல், இத்திட்டத்தின் கீழ் இதுவரை 4,48,955 வீடுகள் ரூ.6,654.35 கோடி மத்திய அரசு நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2020 – 21ம் நிதியாண்டில் 1,20,719 வீடுகளும், புதுச்சேரியில் 2,820 வீடுகளும், 2021 – 22ம் நிதியாண்டில் தமிழகத்தில் 26,888 வீடுகளும். புதுச்சேரியில் 394 வீடுகளும்  கட்டி முடிக்கப்பட்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்காக தமிழகத்துக்கு 2020 – 21ம் நிதியாண்டில் ரூ.1,612.08 கோடியும், புதுச்சேரிக்கு ரூ. 49.75 கோடியும், 2021 – 22ம் நிதியாண்டில் தமிழகத்துக்கு ரூ. 707.94 கோடியும், புதுச்சேரிக்கு ரூ. 8.36 கோடியும் மத்திய அரசின் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளன.