பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சிலை திறப்பு

கடந்த வாரம் சேலம், புத்திர கவுண்டம்பாளையத்தில் 146 அடி உயர உலகின் மிகப்பெரிய முருகன் சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் தும்கூர் மாவட்டம் பினதகரையிலுள்ள பசவேஸ்வரர் மடத்தில் தற்போது சுமார் 161 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை, ஸ்ரீராம நவமியையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார். அவர் பேசுகையில், “ராம நவமியை முன்னிட்டு பசவேஸ்வரர் மடம் பல்வேறு புனிதமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. வரும் நாட்களில் இந்த பகுதியில் பெரிய அளவில் வளர்ச்சி பணிகள் நடைபெறும். மாநிலத்திற்கும் நல்ல காலம் வர இருக்கிறது” என கூறினார்.