விளையாட்டுப் பல்கலைக் கழகம்

உத்தரப் பிரதேசம் மீரட்டில் அமைய உள்ள மேஜர் தியான் சந்த் பல்கலைக் கழகத்திற்கு பிரதமர் மோடி ஜனவரி 2ம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது. விளையாட்டுக்கென உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவது பிரதமரின் நோக்கங்களில் ஒன்று. இந்நோக்கத்தின் ஒருபடியாகவே இந்த பல்கலை கழகம் ஏற்படுத்தப்படுகிறது. உள் மற்றும் வெளி விளையாட்டுக்களுக்கு உண்டான அனைத்து வசதிகளுடன், சுமார் 1,080 விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திறன் உடையதாக இப்பல்கலைக் கழகம் விளங்கும்.