கட்டாய மதமாற்ற புகாரில் கைது

மத்தியப் பிரதேசத்தில் ஜாபுவா மாவட்டத்தில் அன்சிங் நினாமா என்ற ஒரு கத்தோலிக்க பாதிரியுடன் இணைந்து சிங் திண்டோர், மங்கு மெஹ்தாப் பூரியா ஆகிய இருவர் நடத்தும் கிறிஸ்தவ மிஷனரி மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகள், கல்வி உதவி வழங்குவதாகக் கூறி மதமாற்றம் செய்யப்பட்டது. இவர்களால் பாதிக்கப்பட்ட டெடியா பரியா என்ற பழங்குடியினத்தை சேர்ந்தவர் இதுகுறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மத்திய பிரதேசம் அசோக் நகர் மாவட்டத்தில் ஜாவேத் கான் என்ற ஒரு முஸ்லிம் நபர், தன்னை ஒரு ஹிந்துவாகக் காட்டிக்கொண்டு ஒரு பழங்குடியினப் பெண்ணை ஏமாற்றியுள்ளார். அவர்களுக்கு குழந்தை பிறந்த பிறகு அந்த பெண்ணை முஸ்லிம்மாக மாறும்படி வற்புறுத்தியுள்ளார். அந்த பெண் இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் ஜாவேத் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.