திருமலை திருப்பதி சுற்றுலா

திருமலையில் நடக்கும் சுப்ரபாதம், தோமாலை, கல்யாண உற்சவம் உள்ளிட்ட சிறப்பு சேவையில் பங்கேற்க வரும் வெளிமாநில பக்தர்கள் கொரோனா தொற்று பாதிப்பில்லை என்பதற்கான சான்றிதழ் கொண்டுவருவது கட்டாயம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆனால், 300 ரூபாய் கட்டணத்தில் செல்லும் சிறப்பு தரிசனத்திற்கு, இந்த சான்றிதழ் கட்டாயமில்லை என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.