பாகிஸ்தான் சிறுமிக்கு அச்சுறுத்தல்

இத்தாலியில் அரேஸ்ஸோ நகரில் உள்ள டஸ்கனியில் வாழும் ஒரு பாகிஸ்தான் குடும்பத்தை சேர்ந்த ஒரு முஸ்லீம் சிறுமி அங்கு வாழும் ஒரு இந்திய இந்து சிறுவனுடன் ஒரு வருட காலமாக நட்புடன் பழகி வந்துள்ளார். இதனையறிந்த அந்த பாகிஸ்தான் முஸ்லீம் குடும்பம், சிறுமியை வீட்டுக் காவலில் வைத்ததுடன் அவளுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண் மின்னஞ்சலில் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இதனால் இத்தாலிய காவல்துறையினர் அங்கு வந்து பெண்ணை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். காவல்துறை சிறுமியின் தந்தை, சகோதரர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது என ஏ.என்.எஸ்.ஏ தெரிவித்துள்ளது.