இளைஞர்களின் நம்பிக்கையை பா.ஜ.க மீட்கும்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் 8 ஆண்டுகள், நாட்டின் சீரான வளர்ச்சி, சமூக நீதி மற்றும் சமூகப் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. சிறு விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த எட்டு ஆண்டுகளில் பா.ஜ.க அரசு பூர்த்தி செய்துள்ளது. அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்கை நிர்ணயம் செய்ய வேண்டிய நேரம் இது. அனைத்து சவால்களையும் கடந்து மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தொடர்ந்து உழைக்க வேண்டும். உலகமே இன்று பாரதத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கிறது. பாரதம் கனவுகளால் நிரம்பிய நாடாகப் பார்க்கப்படுகிறது. 2014ல் நாட்டு மக்களிடையே பாஜக மீண்டும் இழந்த நம்பிக்கையை மீண்டும் விதைத்தது. இப்போது நாட்டு மக்களும் பா.ஜ.க.வை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கின்றனர். கடந்த சில நாள்களாகவே மொழி அடிப்படையில் சர்ச்சையை கிளப்ப முயற்சி நடைபெற்று வருகிறது. பா.ஜ.க ஒவ்வொரு மாநில மொழியிலும் பாரதக் கலாசாரத்தின் பிரதிபலிப்பைக் காண்கிறது. தேசிய கல்விக் கொள்கையில் ஒவ்வொரு மாநில மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்து உள்ளோம். ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கை மேம்படுத்தி, சமூக நீதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து. பெண்களுக்கு அதிகாரம் அளித்துள்ளோம். தேசபக்தி முக்கியமான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் சில கட்சிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. நாம் அதில் சிக்கிக் கொள்ளக்கூடாது, அவற்றில் கவனமாக இருக்க வேண்டும். ஜனசங்கத்தின் காலத்தில், நம்மைப் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. இருந்த போதிலும், நமது தொண்டர்கள் கஷ்டப்பட்டு தேசத்தைக் கட்டியெழுப்பி உள்ளனர். அதிகாரத்தில் இல்லை என்றாலும் தொண்டர்கள் தேசபக்தியுடன் இருந்தனர். பாரதத்தின் வளமான எதிர்காலத்தை எதிர்நோக்கும் ஒவ்வொரு இளைஞரையும் பா.ஜ.கவில் இணைக்க வேண்டும். குடும்ப அரசியலால் வஞ்சிக்கப்பட்ட இளைஞர்களின் நம்பிக்கையை பா.ஜ.கவால் மட்டுமே மீட்டெடுக்க முடியும்” என்றார்.