இதுதான் மமதா ஆட்சி

ஒரு மாதம் முன்பு, வடக்கு 24  பர்கானா பகுதியில் வசித்து வந்த கோபால் மஜும்தார் என்ற பா.ஜ.க தொண்டரும் அவரது தாயாரான ஷோவா மஜும்தாரும் திருணமூல் காங்கிரஸ் கட்சி குண்டர்களால் கொடூரமாக தாக்கப்பட்டனர். 85 வயதான அந்த தாய் படுக்கையில் இருந்த ஒரு நோயாளி என்றும் பாரமல் அவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டும் கொடூரமாக தாக்கியும் உள்ளனர் அந்த ரௌடிகள். இந்த விஷயம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த தாய் ஷோவா மஜும்தார் கடந்த ஞாயிறு அன்று காலமானார். இதற்கு பா.ஜ.க தேசிய செயலாளர் அரவிந்த் மேனன், பா.ஜ.க ஐ.டி செல் தலைவர் அமித் மாளவியா உட்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த அம்மையார் தன் கட்சி குண்டர்களால் கொடூரமாக தாக்கப்பட்டதற்கோ, அவர் இறந்ததற்கோ மமதா எவ்வித வருத்தமும் இன்றுவரை தெரிவிக்கவில்லை.