கோவேக்ஸின் திருட்டு

ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் உள்ள கந்த்வாதியா அரசு மருத்துவமனை கிடங்கில் கொரோனா தடுப்பூசிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. கடந்த திங்கட்கிழமையன்று இரவில் கிடங்கில் இருந்து 32 புட்டிகள் உள்ள 320 டோஸ் தடுப்பூசி மருந்து மாயமாகி இருந்தது மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு தெரியவந்தது. இது குறித்து மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஹர்ஷ்வர்தன், கொடுத்த புகாரையடுத்து சாஸ்திரி நகர் காவல்துறை விசாரணை செய்து வருகிறது. மருத்துவமனையின் துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது.