பா.ஜ.கவில் அரிந்தம் பட்டாச்சார்யா

மேற்கு வங்காளத்தின் விளையாட்டு கலாச்சாரத்தில் கால்பந்து விளையாட்டுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. அது அங்கு ஒரு தனித்துவமான அந்தஸ்தைக் கொண்டுள்ளது. மேற்கு வங்கத்தில், சட்டமன்ற தேர்தல்கள் நடந்துவரும் நிலையில், மேற்கு வங்கத்தில் புகழ்பெற்ற ‘மோகன் பகான்’ அணியுடன் தொடர்புடைய பெங்காலி கால்பந்து வீரரான அரிந்தம் பட்டாச்சார்யா, இரண்டு நாட்களுக்கு முன் கொல்கத்தாவில் பா.ஜ.க கட்சித் தலைவரும் நடிகருமான மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பா.ஜ.க ஐ.டி பொறுப்பாளர் அமித் மால்வியா முன்னிலையில் பா.ஜ.கவுடன் இணைந்தார். ஐந்தாவது கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அவர் இணைந்தது  இது ஒரு முக்கியமான நிகழ்வாக அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.