வாடிக்கையாளர்கள் உயர்வு

தமிழகத்தில், பி.எஸ்.என்.எல் அலைபேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, இந்தாண்டு ஜனவரியில் ஒரு கோடியே, 9 லட்சத்து, 88 ஆயிரத்து, 625 ஆக அதிகரித்துள்ளது. இது, 2020 டிசம்பரில், ஒரு கோடியே, 9 லட்சத்து, 22 ஆயிரத்து, 980 ஆக இருந்தது. இதன்படி, புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, ஒரு மாதத்தில், 65 ஆயிரத்து, 645 ஆக உயர்ந்துள்ளது என பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.