ஆப்கானிஸ்தானில் தலிபான்கள்

அமெரிக்க படைகள் வாபஸ் ஆவதை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்ட தலிபான் பயங்கரவாதிகள், நாட்டை மீண்டும் கைப்பற்ற தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள். ஆப்கானிஸ்தானில் மொத்தமுள்ள 400 மாவட்டங்களில் 200 மாவட்டங்கள் தற்போது தலிபான்கள் வசம் சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான், ஈரான், கஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை ஒட்டியுள்ள ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதிகளில் பெரும்பாலானவை தலிபான்கள் வசம் சென்றுவிட்டன. 90 சதவீத எல்லைப் பகுதிகளை கைப்பற்றிவிட்டோம். ஒட்டுமொத்த எல்லை பகுதி முழுவதையும் நாங்கள் விரைவில் கைப்பற்றிவிடுவோம். அதன் பிறகு நாடு முழுவதும் எங்கள் வசம் வரும். அதே நேரத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானில் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என தலிபானின் செய்தி தொடர்பாளர் முஜாகித் தெரிவித்துள்ளார்.