விவாகரத்துக்கு காரணம் கரப்பான் பூச்சி

போபாலில் உள்ள மென்பொருள் பொறியாளரான அமர் உஜாலா என்பவருக்கு கடந்த 2017ல் திருமணமானது. அப்போது முதல் அவரது மனைவியின் கரப்பான் பூச்சிகளின் மீதான பயத்தின் காரணமாக அவர் 18 முறை வீட்டை மாற்றியுள்ளார். அவர் தனது மனைவியை சில மனநல மருத்துவர்களிடம் சிகிச்சை, கவுன்சிலிங் என அழைத்தும் சென்றார். ஆனால் அவரின் மனைவி மருத்துவர்களின் பரிந்துரைகளை ஏற்க மறுத்ததுடன், கணவர் தனது பிரச்சினையை புரிந்து கொள்ளவில்லை என்றும், மருந்துகளை கொடுத்து தன்னை ஒரு மனநோயாளியாக சித்தரிக்க முயற்சிக்கிறார் என்று குற்றம்சாட்டினார். கடைசியாக வேறு வழியில்லாமல் அமர் தற்போது விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.