சாதுக்களை சந்தித்த பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி, போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் (பிஏ.பி.எஸ்) சுவாமிநாராயண் சன்ஸ்தா அமைப்பின் மூத்த துறவிகளான ஈஸ்வர்சரண் சுவாமி மற்றும் பிரம்மவிஹாரி சுவாமிகளை சந்தித்து பேசினார். அப்போது உலகளாவிய கொரோனா நெருக்கடி மற்றும் உக்ரைன் போர் நெருக்கடியின் போது சுவாமிநாராயண் சன்ஸ்தா செய்த மிகப்பெரிய நிவாரணப் பணிகளைப் பிரதமர் பாராட்டினார். பிரமுக் சுவாமி மகராஜ்’ஜியின் வரவிருக்கும் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவைப் பற்றியும் அவர்களுடன் விவாதித்தார். சமூகத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்ந்தார்.