ஆதரவை கேட்ட பிரதமர்

ஜெர்மனியின் பெர்லினில் உள்ள போட்ஸ்டேமர் பிளாட்ஸில் உள்ள அரங்கில், அங்கு வாழும் பாரத வம்சாவளியினரிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘உள்ளூர்களுக்கான குரல்’ மற்றும் ‘காதி’ பொருட்களுக்கு அவர்களின் ஆதரவைக் கோரினார்.  இதனை அங்குள்ள பாரத வம்சாவளியினர் அன்புடன் வரவேற்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர். ஜெர்மன் நண்பர்களுக்கு காதியை பரிசாக வழங்குவதாக அவர்கள் தெரிவித்தனர். சமீப ஆண்டுகளாக ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் காதி தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளதை பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார்.