முகக்கவசம் அவசியம்

பாரதத்தின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. சில மாநில அரசுகள் முகக்கவசம் அணிவதை கட்டாயம் ஆக்கியுள்ளதுடன் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன. இந்நிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி கடைபிடிப்பது அவசியம். இவற்றுக்கு தமிழகத்தில் விலக்கு அளிக்கப்படவில்லை. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் என்ற முறை மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.