மதுரையில் துறவியர் மாநாடு

தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை சார்பில் துறவியர் மாநாடு மதுரையில் ஜூன் 4, 5 தேதிகளில் நடக்கவுள்ளது. மதுரையில் நடைபெறும் இம்மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துறவிகளும், மடாதிபதிகளும், ஆன்மிக தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். மேலும், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில பாரதத் தலைவர்களும் இதில் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டில், மதமாற்றம் தடுப்பு, ஹிந்து ஆலய பாதுகாப்பு, பசு பாதுகாப்பு, தீண்டாமை ஒழிப்பு, நீர்நிலை பாதுகாப்பு, ஆன்மீகக் கல்வி, பண்பாட்டுக் கல்வி, ஹிந்து குடும்பக் கலாச்சாரங்கள் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மாநாட்டின் முடிவில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.