வெண்டிலேட்டரை விட்டுக்கொடுத்த குடும்பம்

மூத்த பத்திரிகையாளரும், அடல் பிஹாரி வாஜ்பாயின் முன்னாள் ஆலோசகருமான காஞ்சன் குப்தாவின் தந்தை கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் முன்பு டாடா மெமோரியல் உட்பட பாரதத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அக்ஸிஜன் தயாரிப்பு நிலையங்கள் நிறுவும் தொழில் செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது தந்தை இனி பிழைக்கமாட்டார் என்பதை அறிந்த காஞ்சன் குப்தாவும் அவரது குடும்பத்தினரும், மேற்கொண்டு அவரை வெண்டிலேட்டரிலேயே வைத்திருப்பது மற்றொருவரின் உரிமையை பறிப்பதற்கு சமம் என்பதால் அது தேவைப்படும் மற்றொரு நபருக்கு விட்டுக்கொடுத்தனர். இது எங்கள் குடும்பத்தால் எடுக்கப்பட்ட மிகக் கடினமான முடிவு. என் தந்தையோ தாயோ உயிரோடு இருந்திருந்தாலும் இதையேதான் செய்திருப்பார்கள் என தெரிவித்தார்.