மஹா கும்பமேளா துவக்கம்

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் ‘மஹா கும்பமேளா’ திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி துவங்கி, ஏப்ரல் 30ம் தேதிவரை நடைபெற உள்ளது. தற்போது நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கும்பமேளா விழாவை ஒரு மாதம் மட்டுமே கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. கும்பமேளாவுக்கு வரும் பக்தர்கள், ‘கொரோனா வைரஸ் பாதிப்பில்லை’ என்ற சான்றிதழைக் காண்பித்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், பக்தர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.