ஸ்ரீராம ஜென்மபூமி தரும் உயிர் காற்று

கொரோனாத்தொற்று காரணமாக, பாரதம் முழுவதும் ஏற்பட்டுள்ள திடீர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, அயோத்தி மாவட்டத்தில் இரண்டு ஆக்ஸிஜன் ஆலைகளை நிறுவுவதற்கு நிதி வழங்க உள்ளதாக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை அறிவித்துள்ளது. இந்த இரண்டு ஆக்ஸிஜன் ஆலைகளும் தஷ்ரத் மருத்துவக் கல்லூரியில் நிறுவப்படும். ஸ்ரீராம ஜெனம்பூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையை சேர்ந்த டாக்டர் அனில் மிஸ்ரா ‘தேசம் முழுவதும் கோவிட் -19 வைரஸை எதிர்த்து போராடுகிறது. இதில் பங்கேற்கும் விதமாக, இந்த அறக்கட்டளை ரூ. 55 லட்சம் செலவில் ஆக்ஸிஜன் ஆலையை நிறுவ முடிவு செய்துள்ளது’ என தெரிவித்தார்.