கோயில் சிலை வழக்கு

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் உள்ள புன்னை வனநாதர் சந்நிதியில், மயில் வடிவிலான அம்பாள் தனது அலகில் மலரை ஏந்தியபடி, சிவனுக்கு பூஜை செய்கின்ற வடிவில் மிகவும் பழமையான சிலை இருந்தது. இந்த கோயிலில் குடமுழுக்கு விழாவிற்கு பின்னர், அந்த சிலை காணாமல் போனது. அதற்கு பதிலாக மற்றொரு சிலை வைக்கப்பட்டது. சிலை விவகாரம் பெரிய பிரச்சனை ஆனது. துறை ரீதியாக நடத்தப்படும் உண்மை கண்டறியும் விசாரணையை விரைந்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் நரசிம்மன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில், காணொலி காட்சி வாயிலாக ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆஜரானார். நீதிபதிகள் அறநிலையத்துறை ஆணையரிடம் சராமாரியக கேள்விகளை எழுப்பினர். பிறகு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் விசாரணையை 6 வாரங்களுக்குள் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் வேண்டும். உண்மை கண்டறியும் குழு விசாரணையையும் 6 வாரங்களுக்கு முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.