மசூதியில் பயங்கர ஆயுதங்கள்

குஜராத்தை சேர்ந்த ஹிந்து இளைஞன் கிஷன் பொலியா, கடந்த ஜனவரி 25 அன்று சபீர் மற்றும் இம்தியாஸ் பதான் ஆகிய முஸ்லிம் மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய இரண்டு முஸ்லிம் மதகுருமார்கள் உட்பட 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கு சம்பந்தமாக, குஜராத் பயங்கரவாத தடுப்புப் படையினர் (ஏ.டி.எஸ்) ஜமால்பூர் மசூதியில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், மசூதியில் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டது. முன்னதாக, குஜராத்தின் சோட்டா உதேபூரில் உள்ள ராமர் கோயிலில் கிஷன் பொலியாவின் மரணத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புப் பிரார்த்தனை கூட்டத்திற்கு வந்தவர்களை ஒரு பெரிய முஸ்லிம் வன்முறை கும்பல் திடீரென தாக்கியது. இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.